அவள்-அவன் || Oru kutty kadhai

Tamil couple short story
Oru kutty kadhai

Tamil couple short story...

அவள்-அவன்
அன்று ஒரு நாள்..

சிட்டுக்குருவிகள் சத்தம் எழுப்பி கொண்டு பறந்து வர வண்ணத்துப் பூச்சிகள் சிறகை விரித்து பறக்க ஆரம்பிக்க காலை பொழுது விடிந்தது.

           அழகான காலை, பின்னணியில்  ரேடியோவில் பாடல் ஒலிக்க அதே நேரத்தில் காதல் பாடலுடன் செல்போனில் கால் வந்தது.

    அவன் செல்லை எடுத்து "எல்லாம் பேசிய வரைக்கும் போதும்" என்று சொல்லி கால்-ல கட் செய்தான்.

    மறுபடியும் கால் வந்தது இப்பொழுது அவள் "இனிமே தான் பேச வேண்டியது இருக்கு".

    இப்பொழுது அவன் "என்ன இருக்கு" என்று சொல்லி படுக்கையிலிருந்து எழுந்தான்.

    அவள் முகம் கோபத்தில் சிவக்க பெரும் மூச்சை விட்டு மனதை அமைதிப்படுத்தி கொண்டு "இங்கு யாரும் 100% சரியாக இருப்பதில்லை, நீ நான் நாம எல்லாருமே மனிதர்கள் தான். பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி  நடந்த தவறுகளால் தான் நமக்கு உடை கிடைத்தது நெருப்பு கிடைத்தது இதுப்போல் நிறைய இருக்கு".

          அவன் நக்கலாக சிரித்துக் கொண்டு "ஓஓஓ அதுக்குத்தான் நீங்க எப்பவுமே தப்பா பண்ணுறீங்களோ".

          அவள் புன்முறுவலுடன் "தப்பா பார்த்தால் தப்பா தானே தெரியும்".

          அவன் சாப்பிட்டபடி "தப்பா நடந்தால், அப்ப தப்பா தானே இருக்கும்".

- தொடர்ந்தது


இதைப்போல் பல நிகழ்வுகள் நம் வாழ்வில் ஏற்பட்டிருக்கலாம் பல பிரச்சினை வந்திருக்கலாம் ஆனால்  

- இதுவும் கடந்து போகும் -


_ நன்றி _


இது மாதிரி பிரச்சினை வந்தப்ப நீங்க என்ன பண்ணீங்க?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.


 

Comments

Post a Comment